ரோட்டரி சங்க விழாவில் ஆசிரியர்களுக்கு விருது

நாகை மாவட்டம், வேதாரண்யம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சங்கத்தின் சாசனநாள் விழாவையொட்டி

நாகை மாவட்டம், வேதாரண்யம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சங்கத்தின் சாசனநாள் விழாவையொட்டி, 10 ஆசிரியர்களின் பணியைப் பாராட்டி விருதும், நலத் திட்ட உதவிகளும் திங்கள்கிழமை இரவு அளிக்கப்பட்டன.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டடத்தில் நடைபெற்ற விழாவுக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் வி. செந்தில் தலைமை வகித்தார். சாசனத் தலைவர் அ. கேடிலியப்பன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாவட்ட ஆளுநர் நியமனம் ஆர். பாலாஜிபாபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
விழாவில், வட்டார அளவிலான பள்ளிகள் அளவில் தேர்வு செய்யப்பட்ட 10 ஆசிரியர்களுக்கு ரோட்டரி சங்கத்தின் விருது வழங்கப்பட்டது. கோடியக்காடு சுந்தரம் பள்ளி தலைமையாசிரியர் இரா. நீலமேகம், சிறுதலைக்காடு ஊராட்சி  ஒன்றியப் பள்ளி ஆசிரியை டி. செலின், ஆயக்காரன்புலம் நாடிமுத்து தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் அ. மதியரசு, ஞானாம்பிகா பள்ளி தலைமையாசிரியர் வே. சித்திரவேல், கையவனம்பேட்டை ஊராட்சி  ஒன்றியப் பள்ளி ஆசிரியர் அ. ரகு, சீதாலெட்சுமி உதவிப் பள்ளி தலைமையாசிரியர் ச. வேதநாயகம், நாகக்குடையான் ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியர் மா. சாந்தி, தாணிக்கோட்டகம் ஒன்றியப் பள்ளி தலைமையாசிரியை கே. வீரசேகரி, அரக்கரை சீதாலெட்சுமி பள்ளி ஆசிரியர் சு. சுரேஷ்குமார், குரவப்புலம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியர் எல். சேகர் ஆகியயோருக்கு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில், கரியாப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான அவசர நோயாளிகாளுக்கான படுக்கை அளிக்கப்பட்டது.
விழாவில், சங்கத்தின் செயலாளர் உமாமாகேஸ்வரன், பொருளாளர் மோகன், முன்னாள் தலைவர் ஆர்.சி. சுப்பிரமணியன், கவிஞர் புயல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com