பொறையாறு அருகே செவ்வாய்க்கிழமை குளிக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
தரங்கம்பாடி அருகேயுள்ள அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தமிழரசன் (48). இவர் வீட்டுக்கு அருகில் உள்ள வீரசோழன் ஆற்றில் குளிக்க சென்றபோது, நிலைத் தடுமாறி ஆற்றில் விழுந்து மாயமானர். தகவலறிந்த கிராமத்தினர் ஆற்றில் தேடியும் தமிழரசனை கண்டுபிடிக்க முடியாததால், பொறையாறு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். இதையடுத்து, தீயணைப்பு துறையினர் ஆற்றில் தேடி மூங்கில் வேரில் சிக்கி உயிரிழந்த நிலையில் தமிழரசனின் சடலத்தை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.