இந்திய கிறிஸ்தவ  சமுதாய  முன்னேற்றக் கழக கூட்டம்

குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்திய கிறிஸ்தவ சமுதாய முன்னேற்றக் கழகம் சார்பில் விழிப்புணர்வு நாள் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது.

குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்திய கிறிஸ்தவ சமுதாய முன்னேற்றக் கழகம் சார்பில் விழிப்புணர்வு நாள் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலாளர் யோசேப்பு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் பவுல் செல்வம்  வரவேற்றார். நகரச் செயலாளர் டேவிட் தேவசகாயம் முன்னிலை வகித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் டி.தீமோத்தியு, மாநில விவசாய அணி செயலாளர் சி.கலியபெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எம்.ஜான்பீட்டர், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மகதலேனா மரியாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வ.கோ.ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com