குத்தாலம் அருகே சாராயம் விற்றவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
குத்தாலம் அருகேயுள்ள கங்காதரபுரம் பகுதியில் பாலையூர் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையிலான போலீஸார் ரோந்து சென்றபோது, ஆட்டூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் ( 45) என்பவர் தனது வீட்டு அருகில் புதுச்சேரி மாநில சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.