தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் கருத்தரங்கம்

சீர்காழி கல்வி மாவட்ட அளவிலான தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சீர்காழி கல்வி மாவட்ட அளவிலான தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், ஆசிரியர் துரை ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாவட்ட கல்வி அலுவலர் தியாகராஜன் சிறப்புரையாற்றினார். நாங்கூர் பள்ளி பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், கோதண்டபுரம் பள்ளி வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுமைப்படை ஆசிரியர் செந்தில்குமார் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com