நாகை மாவட்டம், கோடியக்கரையில் நாய்கள் கடித்து 3 வயதுள்ள ஆண் புள்ளி மான் சனிக்கிழமை உயிரிழந்தது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் அரிய வகை வெளிமான், புள்ளி மான்கள் ஆயிரக்கணக்கில் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில், கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் பகுதியில் ஆண் புள்ளி மான் ஒன்று இரை தேடி வந்துள்ளது. மானை கண்ட தெரு நாய்கள் துரத்தி கடித்தது. இதில், காயமடைந்த புள்ளிமான் உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர்களைக் கொண்டு இறந்த புள்ளி மானை உடற்கூறு ஆய்வு செய்தனர்.