ரயில் நிலையத்தில் சுகாதாரப் பணிகள்

குத்தாலம் ரயில் நிலைய நிர்வாகமும், குத்தாலம் லயன்ஸ் சங்கமும் இணைந்து சனிக்கிழமை தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரயில் நிலையத்தில் சுகாதாரப் பணிகள் நடைபெற்றது.


குத்தாலம் ரயில் நிலைய நிர்வாகமும், குத்தாலம் லயன்ஸ் சங்கமும் இணைந்து சனிக்கிழமை தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரயில் நிலையத்தில் சுகாதாரப் பணிகள் நடைபெற்றது.
லயன்ஸ் சங்கத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற, சுகாதாரப் பணியின்போது, ரயில் பயணிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, குத்தாலம் ரயில் நிலைய உள் மற்றும் வெளிப்பகுதியில் தூய்மை பராமரிக்கப்பட்டது.
இதில், லயன்ஸ் மாவட்ட தலைவர்கள் சிக்கந்தர் ஹயாத்கான், ராஜ்குமார், மகாவீர் ஜெயின், வட்டார தலைவர் விஜயராகவன், சங்கச் செயலர் சொக்கலிங்கம், ரயில்வே நிலைய அலுவலர்கள் வைத்தியநாதன், சந்தோஷ்குமார், கிருஷ்ணகுமார் ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com