அம்மா பூங்கா, உடற்பயிற்சிக் கூட கட்டுமானப் பணி: எம்எல்ஏ ஆய்வு

நாகை மாவட்டம், சீர்காழியில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூட கட்டுமானப் பணிகளை சட்டப் பேரவை

நாகை மாவட்டம், சீர்காழியில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூட கட்டுமானப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
சீர்காழியை அடுத்த திட்டை ஊராட்சி சின்னத்தம்பி நகரில் ரூ.30 லட்சம் மதிப்பில் அம்மாபூங்கா, அம்மா உடற்பயிற்சிக் கூட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமானப் பணிகளை துரிதமாக முடிக்குமாறு ஒப்பந்ததாரர் மதியழகனிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி, அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜமாணிக்கம், பேரூர் செயலாளர் போகர். ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com