100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் தேசிகர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  


திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் தேசிகர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  
20182019ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இத்தேர்வு முடிவில் வலிவலம் தேசிகர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 186 மாணவர்களும் தேர்ச்சிப் பெற்று, 100 சதவீத தேர்ச்சியுடன்  நாகை கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். 
மேலும், இப்பள்ளியில் தேர்வு எழுதியவர்களில் கணக்குப்பதிவியல் தணிக்கையியல்  கருத்தியல் பாடத்தில் 3 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.  மாணவர்களின் இந்த வெற்றிக்கு காரணமான பள்ளித் தலைமையாசிரியர் கோ. சக்கரவர்த்தி, பள்ளி ஆசிரியஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அயராமல் படித்த மாணவர்கள் ஆகியோருக்கு பள்ளி ஆட்சிமன்ற குழுத் தலைவர் அ. மனஅழகன், பள்ளிச் செயலர் ஸ்ரீதேவிமனஅழகன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com