அமமுக பொதுச் செயலராக டிடிவி. தினகரன் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாகையில் அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அமமுக துணைப் பொதுச் செயலராக இருந்த டிடிவி. தினகரன் வெள்ளிக்கிழமை அக்கட்சியின் பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, நாகை புதிய பேருந்து நிலையம் பகுதியில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்கள், வணிகர்கள், வாகன ஓட்டுநர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் அமமுக நகரச் செயலர் உலகநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.