நாகை மாவட்டம், திருக்கடையூர் அமிர்த சாய் கோயிலில் மண்டல அபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சாய்பாபாவுக்கு இளநீர், பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் கூட்டு வழிபாடு நடத்தினர்.
இதில் திருக்கடையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாய்பாபாவை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.