நாகை மாவட்டம், குருக்கத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில், ஓ.என்.ஜி.சி. காவேரி அசட் சார்பில் தேசியப் பாதுகாப்பு வார விழா போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
தேசியப் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியன நடத்தப்பட்டன. ஓ.என்.ஜி.சி.யின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைத் தலைவர் என். தங்கராஜ் போட்டிகளைத் தொடங்கி வைத்து மாணவ, மாணவியருக்கு எழுதுபொருள்களை வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் மல்லிகா, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஓ.என்.ஜி.சி. காவேரி அசட் முதன்மைப் பொறியாளர் பி.எம். சுரேஷ், பொறியாளர் எஸ். தியாகராஜன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.