நாகப்பட்டினம்
பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், குளிக்கரை, சந்திரசேகரன் பேட்டைத் தெருவைச் சேர்ந்த குமரேசன் என்பவரது 2-ஆவது மனைவி ராமு (45). இவர், ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திருவாரூர்-நாகை சாலையில் கீழ்வேளூரை அடுத்த சங்கமங்கலம் பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த ராமு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.