மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் அளிப்பு

நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தரப்பில் 468 மனுக்கள் வழங்கப்பட்டன.

நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தரப்பில் 468 மனுக்கள் வழங்கப்பட்டன.
நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீர்வுக் கோரியும் பொதுமக்களிடமிருந்து 455 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்திலிருந்து 13 மனுக்களும் பெறப்பட்டுத் தொடர்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பத்ரிநாத், கலால் உதவி ஆணையர் என். வெங்கடேசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் விக்டர் மரிய ஜோசப், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com