நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் சுரேஷ், பயிற்சி மையம் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும், வங்கியாளர்கள் வங்கிக் கடனுதவி திட்டங்களையும் விளக்கினர். வட்டார அளவில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, விவசாயிகள் தெரிவித்தனர்.