செம்பனார்கோவில் அருகே உள்ள திருவிளையாட்டம் கலைமகள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கைவினை பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி முதல்வர் கமலிஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில், மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கைவினை பொருள்களைத் தயாரித்து காட்சிப்படுத்தினர். இதை பெற்றோர்கள், ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.