சட்டநாதர் கோயிலில் திருப்பனந்தாள் எஜமான்  சுவாமிகள் வழிபாடு

சீர்காழி சட்டநாதர் கோயிலில் திருப்பனந்தாள் எஜமான் சுவாமிகள் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

சீர்காழி சட்டநாதர் கோயிலில் திருப்பனந்தாள் எஜமான் சுவாமிகள் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சட்டநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்மன் உடனாகிய பிரம்மபுரீசுவரர் சுவாமி அருள்பாலிக்கிறார். இக்கோயிலுக்கு திருப்பனந்தாள் எஜமான் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 
தொடர்ந்து, மூலவர் பிரம்மபுரீசுவரர், தோணியப்பர், உமா மகேஸ்வரர், சட்டநாதர், திருநிலைநாயகிஅம்மன், திருஞானசம்பந்தர் ஆகிய சுவாமிகளின் சன்னிதிகளில் வழிபாடு
மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com