இயற்கை சீற்றத் துயர்கள் நீங்கி, உழவர் வாழ்வு மேம்பட அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துகள் என இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி, அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
5 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த மொழி, இனம் சார்ந்த வாழ்வியல் அடிப்படைகளை ஆதாரமாக் கொண்ட ஒரே திருநாள், தமிழர் திருநாள் மட்டுமே. இத்திருநாளில், பண்பாடு, கலாசாரம் காத்திடவும், நாடு நலம் பெறவும், நாட்டு மக்கள் வளம் பெறவும், நல்லிணக்கம் பேணவும், சகோதர, சமாதான சமுதாயம் காத்திடவும், ஏழ்மை விலகிடவும், இயற்கை சீற்றத் துயர்கள் நீங்கிடவும், உழவர்கள் வாழ்வில் வளம் பெறவும் வேண்டி அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.