வரும் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

வரும் எந்தத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும் என, சீர்காழியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற


வரும் எந்தத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும் என, சீர்காழியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நம்பிக்கை தெரிவித்தார்.
சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் எம்எல்ஏ பி.வி. பாரதி தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் பக்கிரிசாமி வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்கள் ராஜமாணிக்கம், நற்குணன், பேரூர் கழக செயலாளர் போகர். ரவி, முன்னாள் எம்எல்ஏக்கள் பூராசாமி, சக்தி, மாவட்டப் பொருளாளர் செல்லையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்றுப் பேசியது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களை தன் குடும்பமாக ஏற்றுக்கொண்டு, சிறப்பாக ஆட்சி செய்தார். அந்த வழியில் தற்போது, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசு திறம்பட ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அமமுக கட்சிக்கு கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது. வரும் எந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்றார்.
இக்கூட்டத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலர், அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நகர அம்மா பேரவைச் செயலாளர் மணி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com