இந்திய ஒளிபரப்பின் பரிணாம வளர்ச்சி கருத்தரங்கு

மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் இயற்பியல் துறை மாணவர் மன்றம் சார்பில், இந்திய

மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் இயற்பியல் துறை மாணவர் மன்றம் சார்பில், இந்திய ஒளிபரப்பின் பரிணாம வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், புதுவை தூர்தர்ஷன் கேந்திராவின் துணை இயக்குநர் ஏ. நவநீதம்பெருமாள், முதுநிலை உதவிப் பொறியாளர் எஸ். குருமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, இந்தியாவில் ஒளிபரப்பின் பரிணாம வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் புகைப்படைக் கலை குறித்து விளக்கினர். நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன் தலைமை வகித்தார். இயற்பியல் துறைத் தலைவர் கே. சிங்காரவேலன் வரவேற்றார். நியூட்டன் பான்ட்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி. பிரபு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் எஸ். ராமலிங்கம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com