பழுதடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை அகற்றக் கோரிக்கை

கொள்ளிடத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய

கொள்ளிடத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கடந்த 1957- ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்த நிலையில், அந்தக் கட்டடம் பழுதடைந்ததால், பாதுகாப்புக் கருதி, கட்டடம் பூட்டப்பட்டது. தற்போது,  இந்தக் கட்டடத்தின் பின்புறம் உள்ள சிறிய கட்டடத்தில், போதிய இட வசதியின்றி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால்,  சிகிச்சைப் பெற வருவோர் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே, முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் நலன் கருதி பழுதடைந்த பழைய கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 இதுகுறித்து, கொள்ளிடம் சமூக சேவகர் பிரபு கூறியது:
 கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் பழுதடைந்ததால் பூட்டப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படும் கட்டடத்தில் போதிய வசதியின்றி  நோயாளிகள் அவதியடைகின்றனர். எனவே, எந்த பயனுமின்றி இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும், பழைய கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com