மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக எம். ரிபாயுதீன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டார்.
மயிலாடுதுறையில் டைல்ஸ் வியாபாரம் செய்து வரும் இவர், 2005-ஆம் ஆண்டு முதல் கமல்ஹாசன் நற்பணி இயக்க நகர செயலராகவும், 2015-ஆம் ஆண்டு முதல் கமல்ஹாசன் நற்பணி இயக்க மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்தார். தற்போது, மக்கள் நீதி மய்ய கட்சியின் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். இவருக்கு ஆர். நஸ்ரின் என்ற மனைவியும், முஹம்மது மஜ்ரில், முஹம்மது மஜ்ரிஜால் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.