திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (நவ. 19) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தது:
கஜா புயல் சீரமைப்பு பணிகள் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு திங்கள்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும். பொதுப்பணித்துறையுடன் இணைந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.