87-ஆவது ஆண்டு மீலாது நபி ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 87-ஆவது ஆண்டு மீலாது நபி ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 87-ஆவது ஆண்டு மீலாது நபி ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
சின்னப் பள்ளியில் தொடங்கிய ஊர்வலம், 2 அணிகளாகப் பிரிந்து ஹாஜியார் தெரு, பாய்க்காரத் தெரு, மேலத்தெரு, மேலப்பள்ளி லைன், அண்ணா காலனி உள்ளிட்ட 33 தெருக்கள் வழியாக ஓர் அணியும், மன்ப - உல் - உலா மேல்நிலைப் பள்ளி, ஆலிம் சாஹிப் அப்பா காலனி, பெரிய கடைத்தெரு, ஜின்னா தெரு, வி.பி.எம். சாலை, அன்வாரியா தெரு உள்ளிட்ட 30 தெருக்கள் வழியாக மற்றொரு அணியும் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் சின்னப்பள்ளியை அடைந்தனர். நபிகள் நாயகத்தின் புகழ்பாடும் இளைஞர்களுக்கு மாலையணிவத்து, வழிநெடுக வரவேற்பு கொடுத்தனர். ஏற்பாடுகளை, கூத்தாநல்லூர் ஈது மீலாது நபவிய்யி சபை மற்றும் மன்ப - உல் - உலா சபை நிர்வாகிகள் 
மேற்கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com