திருவாரூர்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

DIN

திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை சீரமைக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புலிவலம் ஊராட்சியில் கழிவறை வசதிகளை சரிசெய்ய வேண்டும், மதகு வாய்க்காலைத் தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், நடுத்தெருவில் உள்ள கோயிலுக்கு அருகில் தடுப்புச்சுவர் மற்றும் படித்துறை அமைக்க வேண்டும், சாலைகளைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
புலிவலம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் கே. தினேஷ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட தலைவர் கே.எஸ். கோசிமணி, ஒன்றியத் தலைவர் ம. கவிநிலவன், பொருளாளர் வி. விக்னேஷ், துணைச் செயலாளர் கே. சதீஸ், கிளைச் செயலாளர் ஆர். ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குப்பை கொட்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து, அது கைவிடப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT