திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் நினைவகத்தில் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினார்.
திமுக முதன்மைச் செயலாளராக பதவி ஏற்ற பின், திருவாரூர் அருகே உள்ள காட்டூருக்கு வந்த டி.ஆர்.பாலு, அங்குள்ள மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவகத்துக்குச் சென்று, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த மு.கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.