சாராயம் விற்றவர் கைது

கூத்தாநல்லூரில் புதுச்சேரி மாநில சாராயம் விற்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 

கூத்தாநல்லூரில் புதுச்சேரி மாநில சாராயம் விற்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
கூத்தாநல்லூர் பகுதியில் காவல்  உதவி ஆய்வாளர் எஸ். கார்த்திக் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன் உள்ளிட்ட போலீஸார் ரோந்துப் பணியில் இருந்தனர்.
 அப்போது, பாண்டுக்குடி, காடுவெட்டித் தெருவில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்  (35) தனது  வீட்டு கொல்லைபுறத்தில் புதுச்சேரி மாநில சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்ததை அடுத்து, போலீஸார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 105 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com