திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பவர் ஜேசிஐ வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பின்லே பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவர் க. கண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருமக்கோட்டை எரிவாயு சுழலி நிலைய மேற்பார்வை பொறியாளர் கே. சம்பத் மகாராஜா கலந்துகொண்டார்.
விழாவையொட்டி, மாணவர்களின் மாறுவேடம், நடனம், கட்டுரை, பேச்சுப் போட்டி ஆகியவை நடைபெற்றன. இதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. அரசு, தனியார் துறைகள், சுயதொழில், வர்த்தகம் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சேவை விருதுகளை தேசிய பயிற்சியாளர் சா. சம்பத் வழங்கினார். நிகழ்ச்சியில், மண்டல இயக்குநர் வே. காந்தி லெனின், திட்ட இயக்குநர் மணிகண்டன் முருகன், செயலாளர் வி. சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.