திருவாரூர்

ஜேசிஐ வார விழா நிறைவு

DIN

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பவர் ஜேசிஐ வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பின்லே பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவர் க. கண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருமக்கோட்டை எரிவாயு சுழலி நிலைய மேற்பார்வை பொறியாளர் கே. சம்பத் மகாராஜா கலந்துகொண்டார்.
விழாவையொட்டி, மாணவர்களின் மாறுவேடம், நடனம், கட்டுரை, பேச்சுப் போட்டி ஆகியவை நடைபெற்றன. இதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. அரசு, தனியார் துறைகள், சுயதொழில், வர்த்தகம் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சேவை விருதுகளை தேசிய பயிற்சியாளர் சா. சம்பத் வழங்கினார். நிகழ்ச்சியில், மண்டல இயக்குநர் வே. காந்தி லெனின், திட்ட இயக்குநர் மணிகண்டன் முருகன், செயலாளர் வி. சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT