திருவாரூர்

திருவாரூரில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற பாடுபடவேண்டும்: திமுக கூட்டத்தில் தீர்மானம்

DIN

திருவாரூர் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
திருவாரூர் சட்டப் பேரவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களாக திருச்சி மாவட்டச் செயலர் கே.என். நேரு, கீழ்வேளுர் சட்டப் பேரவை உறுப்பினர் உ. மதிவாணன், நாகை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோரை திமுக தலைமை நியமித்துள்ளது. இதையடுத்து, திருவாரூரில் செவ்வாய்க்கிழமை, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி, பேரூராட்சி செயலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், திருவாரூர் சட்டப் பேரவை தொகுதி மறைந்த திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதியை தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த தொகுதியாகும். எனவே, நடைபெறவுள்ள இடைத்தேர்தலை நேர்மையாக சந்தித்து அதிகவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற திமுகவினர் பாடுபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் மக்களவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

SCROLL FOR NEXT