நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரம் அறிவுச்சுடர் ஆசிரியர் பேரவையின் சார்பில், தமிழக

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரம் அறிவுச்சுடர் ஆசிரியர் பேரவையின் சார்பில், தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தங்கராசு, மாங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மகாதேவன் ஆகியோருக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஆசிரியர் குமணன் தலைமை வகித்தார். ஆசிரியர் உத்தமசோழன் முன்னிலை வகித்தார். பட்டிமன்றப் பேச்சாளர் ஜோசப் இருதயராஜ், லயன்ஸ் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், எழிலூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விக்டர்ராஜ், நகராட்சி கணினிப்பொறியாளர் சிற்றரசு, பொறியாளர் கைலாசநாதன், ஆசிரியர்கள் இந்திரசித்தன், ஆறுமுகம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டப் பொருளாளர் சுபாஷ், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன், வரம்பியம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் டேஸ்டி சுப்பிரமணியன் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.
மேலும், விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை, சந்தன மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. அறிவுச்சுடர் ஆசிரியர் பேரவையைச் சேர்ந்த முருகானந்தம் வரவேற்றார். வீரபாண்டியன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தீனதயாளன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com