நீடாமங்கலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு 1,250 டன் பொதுரக அரிசி பொதுவிநியோகத் திட்டத்துக்காக சரக்கு ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு, மன்னார்குடி வட்டக் கிடங்கு ஆகியவற்றிலிருந்து 1,250 டன் பொதுரக அரிசி 100 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு பொதுவிநியோகத் திட்டத்துக்காக கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.