சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி திருவாரூரில் வியாழக்கிழமை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், உணவூட்ட மானியம் ரூ. 5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும்போது அமைப்பாளருக்கு ரூ. 5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முதலமைச்சரின் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
சங்க மாவட்டத் தலைவர் வி.சி. குமார் தலைமையில் திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய பேரணி பனகல் சாலை வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.