திருவாரூரில் கம்ப சேவை மகோத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர், ராஜாத் தெருவில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி ராமானுஜர் கூடம் உள்ளது. இங்கு, கடந்த 108 ஆண்டுகளாக ராஜாத் தெருவாசிகளால், கம்ப சேவை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல், நிகழாண்டுக்கான கம்ப சேவை சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு கம்ப சேவை ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.