மாநில அறிவியல் கண்காட்சி: நீலன் பள்ளி மாணவி தேர்வு

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க நீடாமங்கலம் நீலன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி தேர்வாகியுள்ளார்.

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க நீடாமங்கலம் நீலன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி தேர்வாகியுள்ளார்.
திருவாரூர் புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் விருதுக்கான கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. இதில், நீலன் மெட்ரிக். பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்துவரும் இலக்கியா கலந்துகொண்டு, நெகிழியை எரிக்கும்போது வெளியாகும் வாயுவிலிருந்து எரிபொருள் தயாரித்தல் என்னும் தலைப்பில் தன் படைப்பைக் காட்சிப்படுத்தினார்.
கண்காட்சியில் கலந்துகொண்ட 60-க்கும் மேற்பட்ட படைப்புகளில், இலக்கியாவின் படைப்பு மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்தது. இதன்மூலம் மாநில அளவிலான கண்காட்சிக்கு அவர் தேர்வாகியுள்ளார். 
அவருக்கும், அவரை பயிற்றுவித்த ஆசிரியருக்கும் பள்ளியின் தாளாளர் நீலன். அசோகன், பள்ளியின் முதல்வர் ஜி. புவனேஸ்வரி ஆகியோர் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com