திருவாரூர்

மெட்ரிக் பள்ளியில் ஆங்கில தின விழா

DIN

கூத்தாநல்லூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியுடன், கோவை இன்ஸ்டிடியூட் ஆஃப் வெர்பல் கம்யூனிகேஷன் இணைந்து ஆங்கில தின விழாவை கொண்டாடினர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, அகாடெமிக் ஒருங்கிணைப்பாளரும், ஆங்கில ஆசிரியருமான எம். அப்துல் வஹாப் தலைமை வகித்தார். முதல்வர் ஏ. தியாகராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஏ.ஏ. அப்துல் ரசாக் பங்கேற்றார். 
ஆங்கிலப் பேச்சுப் போட்டி, நடனம், பாடல், கதைக்கூறல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தாளாளர் டாக்டர் ஜே.பி. அஷ்ரப் அலி பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். தொடர்ந்து, மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், டாக்டர் அக்பர் சலீம், சீனி முகமது, சீனி ஜெகபர் சாதிக், நஜ்முதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT