நீடாமங்கலம் பகுதி கோயில்களில் செவ்வாய்க்கிழமை பௌர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதை முன்னிட்டு நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் ராஜகணபதி, யமுனாம்பாள் சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல், நரிக்குடி எமனேசுவரி சமேத எமனேசுவரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பௌர்ணமி வழிபாடு நடைபெற்றது.