மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி உயிர் வேதியியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பிடம் பெற்றனர்.
தஞ்சையில் உள்ள மருதுபாண்டியர் கல்லூரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. இதில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறை, உயிர் வேதியியல் துறை, நுண்ணுயிரியல் துறையை சேர்ந்த 40 மாணவியர் கலந்துகொண்டனர்.
இதில், இக்கல்லூரியின் ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறையினர் நெருப்பில்லா சமையலில் முதல் மற்றும் இரண்டமிடத்தையும், மாதிரி வழங்கலில் மூன்றாம் இடத்தையும், உயிர் வேதியியல் துறையினர் ரங்கோலி மற்றும் வாய்மொழி பேசுவதில் இரண்டாமிடத்தையும், நுண்ணுயிரியல் துறையினர் நெருப்பில்லா சமையலில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவியரை கல்லூரித் தாளாளர் வி. திவாகரன், முதல்வர் சீ. அமுதா உள்ளிட்டோர் பாராட்டினர்.