சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டையில் சாலையை சீரமைக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முத்துப்பேட்டையில் சாலையை சீரமைக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேட்டை சிவன் கோயில் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பேரூராட்சியின் 5 வார்டுகளை இணைக்கும் பங்களா வாசல் முதல் பேட்டை வரை உள்ள சிமென்ட் சாலையை சீரமைக்க வேண்டுமென முழக்கம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக்குழு நிர்வாகி செல்லத்துரை தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் கனகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் தமிழ்மணி போராட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார். தகவலறிந்து வந்த பேரூராட்சி செயல் அலுவலர், சீரமைப்புப் பணியைத் தொடங்க நடவடிக்கை எடுப்பதாகவும், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும் உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com