திருவாரூர்

வேலை நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

DIN

திருவாரூரில் வியாழக்கிழமை பட்டாசு தொழிலாளர்களுக்கு வேலை நிவாரணம் வழங்கக் கோரி இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் கெம்ப்ளாஸ்ட் தொழிற்சாலை, காஞ்சிபுரம் ராயல் என்பீல்டு தொழிற்சாலை, கோவை பிரிகால் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை, தொழிற்சங்கம் அமைத்த காரணத்தால், பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களுக்கு திரும்ப பணி வழங்க வலியுறுத்தியும், தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தியும், விருதுநகரில் உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக வேலை இல்லாமல் இருக்கும் பட்டாசு தொழிலாளர்களுக்கு வேலை நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
திருவாரூர் தலைமை தபால் நிலையம் அருகே சிஐடியு மாவட்டத் தலைவர் ரா. மாலதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நா. பாலசுப்ரமணியன், ஜி. பழனிவேல், எம்.கே.என். அனீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT