ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு

திருவாரூரில் ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு சனிக்கிழமைநடைபெற்றது. 


திருவாரூரில் ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு சனிக்கிழமைநடைபெற்றது. 
திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். துரை தலைமை வகித்தார். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான் ஜோசப், துணைக் காவல் கண்காணிப்பாளர் தனசேகரன், நேர்முக உதவியாளர்கள் உலகநாதன், ஞானசேகரன், காவல் ஆய்வாளர்கள் பங்கேற்று, தகுதியான நபர்களைத் தேர்வு செய்தனர். 
ஊர்க்காவல் படை பணித் தேர்வுக்காக 62 பேர் பங்கேற்றனர். பங்கேற்றவர்களின் உயரம், எடை, மார்பளவு உள்ளிட்டவை குறித்து அளவீடு
செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com