தமிழர் நலக் கழகம் சார்பில் குழந்தைகள் தின விழா

தமிழர் நலக் கழகம் சார்பில் மயூர் விஹார் பேஸ் 3ல் குழந்தைகள் தின விழா  அண்மையில் நடைபெற்றது.

தமிழர் நலக் கழகம் சார்பில் மயூர் விஹார் பேஸ் 3ல் குழந்தைகள் தின விழா  அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, விளையாட்டுப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.
விழாவில் சிறுமி பூஜா வரவேற்றுப் பேசினார். நேரு குறித்து சிறுவர் சிறுமியர்கள் உரையாற்றினர். ஆசிரியை சுமதி, நேருவின் வாழ்க்கை வரலாற்றை விவரித்துக் கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு தமிழர் நலக் கழக தலைவர் சுப்பையா பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com