மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகளுக்கு ரூ. 20 லட்சம் லஞ்சம் அளிக்க முயன்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நீரஜ் கொச்சாருக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
இது தொடர்பாக நீரஜ் கொச்சார் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அண்மையில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. காவல்துறை விசாரணையால் குணமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்த ஜாமீன் மனு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.கே. மல்ஹோத்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "நீரஜ் கொச்சாருக்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபம் இல்லை' எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ரூ.1 லட்சம் சொந்த ஜாமீனில் நீரஜ் கொச்சாரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.