புதுதில்லி
நவீனமாகும் ரோஹிணி தடயவியல் ஆய்வகம்
ரோஹிணியில் உள்ள தடயவியல் ஆய்வகம் நவீனப்படுத்தப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ்
ரோஹிணியில் உள்ள தடயவியல் ஆய்வகம் நவீனப்படுத்தப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் தெரிவித்தார். ரோஹிணியில் உள்ள தடயவியல் மையத்தை மத்திய நிர்வாகச் சீர்திருத்தத் துறை குழு வியாழக்கிழமை ஆய்வு செய்தது. அப்போது தடயவியல் ஆய்வகத்தில் உள்ள வசதி குறைபாடுகள் குறித்து அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தடயவியல் ஆய்வகத்தை நவீனப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தலைநகர் தில்லியில் 14 நடமாடும் தடயவியல் ஆய்வகங்களை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.