தில்லி பாலம் விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு கொண்டுவரப்பட்ட, காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல்களுக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, உயிரிழந்த வீரர்களுக்கு முதல்வர் கேஜரிவால் டிடியு மார்க்கில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதல் சம்பவம் கோழைத்தனமானது; கடும் கண்டனத்துக்குரியது. தில்லி அரசும், தில்லி மக்களும் மத்திய அரசுடன் உருதுணையாக இருக்கும். மத்திய அரசு, ராணுவப் படையினர் எடுக்கும் எந்த முடிவுக்கும் ஆதரவு தெரிவிக்கிறேன்' என்றார்.