கரோல் பாக்கில் தீ விபத்து ஏற்பட்ட அர்பித் ஹோட்டல் நடத்துவதற்கான உரிமம் பெற்ற ஷர்தேந்து கோயலை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அவரை தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு அனுமதி கோருவோம் என்று தில்லி காவல் துறை துணை ஆணையர் (குற்றப்பிரிவு) ராஜேஷ் தியோ கூறினார். முன்னதாக, கதார் நாட்டில் இருந்து தில்லி விமான நிலையத்துக்கு கடந்த சனிக்கிழமை வந்த அர்பித் ஹோட்டலின் உரிமையாளர் ராகேஷ் கோயலை போலீஸார் கைது செய்தனர். இவர் ஷர்தேந்து கோயலின் சகோதரர்ராவார். இந்த வழக்கில் ஷர்தேந்து கோயல் நான்காவது நபராக கைது செய்யப்பட்டுள்ளார். தீ விபத்து நடந்தவுடன் அர்பித் ஹோட்டலின் பொது மேலாளர், வரவேற்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.