தில்லி அரசுப் பள்ளிகளில் 8 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினி பயிற்சி வழங்க தில்லி அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தில்லி அரசு அதிகாரிகள் கூறியதாவது:
தில்லி அரசுப் பள்ளிகளில் 8- 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி வழங்க தில்லி கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. இதன்படி 8-10 வகுப்பு மாணவர்களுக்கு கணினி தொடர்பான ஆரம்ப அறிவை வழங்கும் வகையில் பயிற்சிகள் இருக்கும். 10-12 வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கப்பட்ட சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். இந்தக் கணினிப் பயிற்சிகளுக்கு முதல் கட்டமாக 184 அரசுப் பள்ளிகள் தேர்வாகியுள்ளன. இந்தப் பயிற்சிகள் டிசிஎஸ் கணினி நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார் அவர்.