புதுதில்லி

17 வழக்குகளில் தொடர்புடையவர் கைது

DIN

சங்கிலி பறிப்பு, திருட்டு உள்பட 17 வழக்குகளில் தேடப்பட்டு வந்த இளைஞர் லாஜ்பத் நகர் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: தில்லி கால்காஜி பகுதியில் அண்மையில் மோட்டார்சைக்கிள் ஒன்று திருட்டுப் போனது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்தத் திருட்டு வழக்கில் தொடர்புடையவரின் நடமாட்டம் குறித்து போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அவரைப் பிடிப்பதற்கு தனிப் படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த வழக்கில் தொடர்புடைய குர்விந்தர், தென்கிழக்கு தில்லியில் உள்ள லாஜ்பத் நகரில் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தில்லி உள்பட பல்வேறு இடங்களில் சங்கிலி திருட்டு, திருட்டு உள்பட 17 வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீது அமர்காலனி காவல் நிலையத்தில் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT