நாகர்கோவில் அருகே பெண்ணின் பைக்கை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் பட்டகசாலியன் விளை பகுதியைச் சேர்ந்தவர் ரேகா (28). இவர், வழக்கம்போல சனிக்கிழமை இரவு தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் நள்ளிரவில் பைக் திடீரென்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாம். இதையடுத்து ரேகா மற்றும் அவரது வீட்டிலிருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்குள் பைக் முற்றிலுமாக எரிந்து விட்டது.
இதுகுறித்து நேசமணிநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குடும்பத் தகராறு காரணாக பைக் எரிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.