பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி குமரி மாவட்ட கிராம உதவியாளர்கள் தோவாளை வட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இயற்கை இடர்பாட்டு பணிக்கு சிறப்பு படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, டிச. 19ஆம் தேதி சென்னை கோட்டை முன் வாயில் கருப்பு துணி கட்டி நூதனப் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.