கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடல் நீர்மட்டம் தாழ்வுநிலை காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு நாள்முழுக்க படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கடல் நீர்மட்டம் மிகவும் தாழ்வாக இருந்தது. இதனால், அங்கு படகுப் போக்குவரத்து நாள்முழுக்க ரத்து செய்யப்பட்டது. ஆனால், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வழக்கம்போல் படகுகள் இயக்கப்பட்டன.